தமிழ்நாடு

tamil nadu

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட ஜாம்பவான் - இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!

By

Published : Jan 27, 2020, 11:20 AM IST

கூடைப்பந்தாட்ட ஜாம்பவான் கோப் பிரைன்ட் மறைவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒபாமா, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

tribute to Bryant
tribute to Bryant

அமெரிக்காவின், நியூயார்க் கூடைப்பந்தாட்டக் கழகமான லாக்கர்ஸ் அணியின் முன்னாள் ஜாம்பவன் கோப் பிரைன்ட், அவரது மகள் ஜியானா பிரைன்ட் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இத்தகவலை நியூயார்க் தீயணைப்புத் துறையினரும் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இத்தகவலை அறிந்த பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ' கோப் பிரைன்ட் அனைத்து காலங்களிலும், மிகச்சிறந்த கூடைப் பந்தாட்ட வீரராக வலம்வந்தவர். அதனால் தற்போது தான் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் அவர் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார். அதனை எதிர்காலத்திலும் பின்பற்ற எண்ணினார். மேலும் அவரது அழகான மகள் ஜியானாவின் இழப்பு இத்தருணத்தில் இன்னும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது' எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது ட்விட்டர் பதிவில், ' கோப் ஒரு மிகச்சிறந்த விளையாட்டு வீரர். அவர் இப்போது தான் தனது சொந்த வாழ்க்கையை ஆரம்பித்திருந்தார். மேலும் கியானாவின் இழப்பை நினைக்குபோது பெற்றோர்களாகிய நமக்கு இன்னும் அதிகம் வலிக்கிறது. இவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு மிகப்பெரும் சோகத்தை அளித்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவின் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'RIP MAMBA' எனவும், தமிழ் நடிகர் தனுஷ், 'பிரைன்ட், அவரது மகள் ஜியானாவின் புகைப்படத்தைப் பதிந்து 'NO' எனப்பதிவிட்டு' தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'தகுதியானவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்லை' - மல்யுத்த வீராங்கனை வேதனை

ABOUT THE AUTHOR

...view details