தமிழ்நாடு

tamil nadu

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டி - 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

By

Published : Jul 8, 2022, 7:11 AM IST

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா அபார வெற்றி
இந்தியா அபார வெற்றி

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இரண்டு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்தனர். ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார்.

அக்சர் படேல் 17 ரன்னுடன் வெளியேறினார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் 4 ரன்களிலும் கேப்டன் ஜோஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மாலன் 21 ரன்கள், ஹேரி புரூக் 28 ரன்கள், மொயீன் அலி 36 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். கிறிஸ் ஜோர்டான் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

19.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தொடர்ந்து இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாஹல், அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையும் படிங்க:தோனி பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details