கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடர் பிளே ஆஃப் சுற்றை எட்டிவிட்டது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி - ஒடிசா எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
போட்டி தொடங்கிய 9ஆவது நிமிடத்திலேயே ஒடிசா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்திய டியாகோ மௌரிசியோ கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார்.
அதன்பின் அட்டாக்கிங் ஆட்டத்தில் இறங்கிய மும்பை அணிக்கு ஒபேச்சே ஆட்டத்தின் 13, 43 ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்த கோல்களை அடிக்க, பிபின் சிங் மற்றும் காட்டார்டு ஆகியோர் தங்களது பங்கிற்கு 38 மற்றும் 44ஆவது நிமிடங்களில் கோலடித்து அசத்தினர்.