இந்தியர்களின் கோடைக்கால கொண்டாட்டங்களில் முக்கியமானவற்றுள்ள ஒன்று ஐபிஎல் தொடர். இந்தாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் இறுதியில் தொடங்கி இன்றைய இறுதிப்போட்டியுடன் நிறைவுபெற இருக்கின்றன. குஜராத், லக்னோ எனப் புதிதாக இரண்டு அணிகள் என மொத்தம் 10 அணிகளுடன் ஐபிஎல் 2022 தொடர் அமர்களமாக ஆரம்பித்தது.
மெகா ஏலத்தில் இருந்தே எதிர்பார்ப்பை எகிறவைத்து இந்தத் தொடரில் ஏபி டிவில்லியர்ஸ், கெயில், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ஸ்டார்க் போன்ற நட்சத்திர டி20 வீரர்கள் விளையாடவில்லை. இப்படி தொடங்கிய ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத குஜராத் அணியும், ஆரம்பத்தில் இருந்தே அனைவரின் கவனத்தையும் பெற்ற ராஜஸ்தான் அணியும் தற்போது இறுதிப்போட்டி வரை வந்துள்ளன.
ஒரு குறிப்பிட்ட வீரர்கள் என்றில்லாமல், ஒட்டுமொத்த வீரர்களின் பங்களிப்பினால் இவ்விரு அணிகளும் இந்த இடத்திற்கு வந்துள்ளன. அப்படியிருக்க, இன்றைய இறுதிப்போட்டியில், எந்தெந்த வீரர்கள் ஜொலித்து தங்களின் அணியை ஜெயிக்கவைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது. அதில், இரண்டு அணிகளிலும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களை இங்கு காண்போம்.
கேப்டன்கள் இன்னிங்ஸ்:மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறி, ஒரு தனி அணியை கட்டியெழுப்பி தற்போது பைனல்ஸ் வரை கொண்டுவந்து விட்டிருக்கிறார். காயத்தில் இருந்து மீண்டு நீண்ட இடைவேளக்கு பின்னர் பந்துவீசிய பாண்டியா, இந்த தொடர் முழுவதும் பேட்டிங் ஆர்டரிலும் முன்னேற்றம் கண்டு மூன்றாவது இடத்தில் ஆடிவந்தார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. இதுவரை 4 அரைசதங்களுடன் 453 ரன்களை எடுத்து, 132.84 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார்.