வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி, ஓரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இந்தப்போட்டியில் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகூர் ரஹிம் தனது அதிரடியான ஆட்டத்தினால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது இரட்டை சதத்தையடித்து அசத்தினார்.
வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதன் மூலம் வங்கதேச அணி 15 மாதங்களுக்கு பின்பு தனது முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் இரட்டை சதம் அடித்த முஷ்பிகூர் ரஹிம் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "வங்கதேச அணியின் வீரர்கள் ஓவ்வொருவரும் தங்களுக்காக விளையாடாமல், தங்கள் தாய் நாட்டிற்காக விளையாடவேண்டும்.
ஏனெனில் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்காக விளையாடியாகவே வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒப்பந்த வீரர்கள் அனைவரும் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படும் போது, அவர்களிடம் சொல்லும்படியாக விளையாட வேண்டியது, அவர்களின் கடைமை. இதனை அவர்களாகவே புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்றார்.