தமிழ்நாடு

tamil nadu

டிவி சீரியலில் தோன்றும் பிக்பாஸ் யாஷிகா!

By

Published : Jul 20, 2020, 7:04 PM IST

நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது புதிதாக வெளியாகவிருக்கும் சின்னத்திரை தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

Yashika
Yashika

'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதையடுத்து பிக்பாஸ்-2 சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்நிலையில், இவர் தற்போது முதன்முறையாக சின்னத்திரை தொடரில் நடித்துவருகிறார். இதற்கான அறிவிப்பை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதாவது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடரில் இவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அதில் சிபு சூரியன், பிரியங்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இத்தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், வரும் 27ஆம் தேதி முதல் மீண்டும் ரோஜா தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

முதல்முறையாக சீரியலில் களமிறங்கியுள்ள யாஷிகாவைத் தொலைக்காட்சியில் காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details