தமிழ்நாடு

tamil nadu

திரையரங்குகள் திறக்க அனுமதி மறுப்பு: சோகத்தில் தயாரிப்பாளர்கள்

By

Published : Jul 2, 2021, 10:20 PM IST

தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், திரையரங்குகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள்
திரையரங்குகள்

தமிழ்நாட்டில் பரவிவரும் கரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாத இறுதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளங்கள் நோக்கிப் படையெடுத்துக் கிளம்பியுள்ளன.

இதனையடுத்து தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு வரும் 5ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருக்கும் எனத் தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் தற்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நீட்டிப்பில், திரையரங்குகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் டாப் நடிகர்களின் படங்களை திரையில் காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஒருவழியாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான 'மஹா' டீசர்

ABOUT THE AUTHOR

...view details