தமிழ்நாடு

tamil nadu

கரோனா விழிப்புணர்வு பாடல் பாடி உயிர் பிரிந்த எஸ்.பி.பி!

By

Published : Sep 25, 2020, 7:39 PM IST

Updated : Sep 25, 2020, 8:48 PM IST

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பி. கடைசியாக பாடிய கரோனா விழிப்புணர்வுப் பாடல் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகிறது.

எஸ்.பி.பி
எஸ்.பி.பி

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து 14ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவந்த நிலையில், நேற்று (செப்.24) அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்தநிலையில் இன்று (செப்.25) மதியம் 1.04 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கரோனா விழிப்புணர்வு பாடல் பாடி உயிர் பிரிந்த எஸ்.பி.பி

இந்நிலையில், அவர் கடைசியாக கரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி இருந்தார். அப்பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். தற்போது அப்பாடல் இணையத்தில் மீண்டும் வைரலாக தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க:எஸ்.பி.பி.யை நினைத்து கதறி அழுத மனோபாலா!

Last Updated :Sep 25, 2020, 8:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details