புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மனித இனத்தின் மீது உள்ள நம்பிக்கை அதிவேகமாக குறைந்து வருகிறது. குரலற்றவர்களுக்கு உதவுவதற்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பலவீனமானவர்களை காயப்படுத்தி அரக்கத்தனமான இன்பத்திற்காக குழந்தைகளை கொள்கிறோம்.