தமிழ்நாடு

tamil nadu

யோகாவில் முதலீடு செய்யும் ஐஸ்வர்யா தனுஷ்!

By

Published : Jul 20, 2019, 9:18 PM IST

ரஜினியின் மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா தனுஷ், யோகா நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து முதலீட்டாளராக மாறியுள்ளார்.

Aishwarya Dhanush

தமிழ் சினிமாவில் '3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ். இவர் ரஜினி காந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியும் ஆவர். இவர் தற்போது 'சர்வா யோகா' நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் - ஜெனிபர் லோபஸ்

இது குறித்து அவர் கூறுகையில், நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் நாம் தினசரி போராடி வருகின்றோம். சர்வா மற்றும் திவா யோகா பணிகளை நான் பார்த்து வருகிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இந்தக் கூட்டணியின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா மற்றும் திவா யோகா அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.

நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு நினைவூட்ட வேண்டும் என்பது சர்வாவின் குறிக்கோள். இந்த குறிக்கோளுக்காகவே நான், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்கிறேன். இந்நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் பத்து கோடி மக்களைச் சென்றடைய திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுக்க 100 ஸ்டூடியோக்களை திறக்கப்பட இருக்கிறது. பெண்களுக்கான பிரத்யேக யோகா மையம், சென்னையில் அடுத்த மாதங்களில் செயல்பட இருக்கிறது, என்றார்.

ஐஸ்வர்யா தனுஷ்

சர்வா நிறுவனத்திற்கு ஜெனிபர் லோபஸ் ஆகிய பாலிவுட் பிரபலங்கள் பலர் நிதியளித்துள்ளனர்.

Intro:யோகாவில் முதலீடு செய்யும் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்.Body:'3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், தற்போது முதலீட்டாளராக மாறியுள்ளார். இவர் 2016-ல் தொடங்கப்பட்ட 'சர்வா யோகா' நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா தனுஷ், நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் நாம் தினசரி போராடி வருகின்றோம். மலைக்கா மற்றும் சர்வேஷின், சர்வா மற்றும் திவா யோகா பணிகளை நான் பார்த்து வருகிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இந்த கூட்டணியின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா மற்றும் திவா யோகா அதிகரிக்கும் என்று நம்புகிறேன். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு நினைவூட்ட வேண்டும், என்பது சர்வாவின் குறிக்கோள், நான் இதில் முதலீடு செய்ததற்கான காரணமும் இதுவே என்று கூறினார்.

இந்த நிறுவனம் 10 கோடி மக்களை அடுத்த 5 வருடங்களில் சென்று சேரத் திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுக்க 100 ஸ்டூடியோக்களை வரும் மாதத்திற்குள் திறக்கவுள்ளது சர்வா. இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு 18,000 உறுப்பினர்கள் என ஒரு வாரத்திற்குள் 3500க்கும் மேற்பட்ட வகுப்புகளை நடத்தி வருகிறது. சர்வாவின் திவா யோகா ஸ்டூடியோ - பெண்களுக்கான பிரத்யேக யோகா மையம், சென்னையில் அடுத்த மாதங்களில் செயல்படவுள்ளது.

___
நேரடி மற்றும் டிஜிட்டலின் மூலம் யோகாவினால் உண்டாகும் பலனை பார்வையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் எடுத்துரைக்கின்றனர். சர்வா நிறுவனத்திற்கு மலைக்கா அரோரா, சாஹித் கபூர், பாப் நட்சத்திரம் ஜெனிபர் லோபஸ் ஆகியோர் பாலிவுட் பிரபலங்கள் பலர் நிதியளித்துள்ளனர், .

இந்நிறுவனத்திற்கு உலகளவிலான மூதலீட்டின் மூலம் 34.47 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள சர்வா ஸ்டூடியோக்களின் எண்ணிக்கை அடுத்த மாதத்தில் 100-ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Conclusion:2022-க்குள் 500 ஸ்டூடியோக்களை ஓயோ நிறுவனத்துடன் இணைந்து அமைக்கத் திட்டமிட்டுள்ளதுசர்வா நிறுவனம்.

ABOUT THE AUTHOR

...view details