தமிழ்நாடு

tamil nadu

சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை; நீதிமன்றத்தில் சிபிஐ எளிதில் நிரூபிக்கும்: சுப்பிரமணியன் சுவாமி

By

Published : Sep 13, 2020, 2:56 AM IST

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் வெறும் தற்கொலை அல்ல, சதித்திட்டம் தீட்டி கொலை செய்யப்பட்டதற்கு ஏராளமான சான்றுகள் இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

நடிகர் சுஷாந்த் சிங் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலிவுட் சினிமாவில் நிலவும் குடும்ப ஆதிக்கத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக காரணம் கூறப்பட்டுவந்த நிலையில், அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என சுப்பிரமணியன் சுவாமி கூறியது வழக்கின் போக்கையே மாற்றியது.

தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கை இந்தியாவின் முப்பெரும் துறைகளான சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் வெறும் தற்கொலை அல்ல, கொலை என்றும் அதில் சதித்திட்டம் தீட்டி இருப்பதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் மூன்று துறையினரும் சமர்ப்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனையடுத்து பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் வழக்கில் நீதி எப்போது கிடைக்கும் என எஸ்.எஸ்.ஆர் பக்தர்கள் கேட்கிறார்கள். என்னால் சொல்ல முடியாது.
ஆனால் எய்ம்ஸ் குழுவை யாராலும் முழுமையாக விசாரணை மேற்கொள்ள முடியவில்லை. எனவே இந்த வழக்கில் மருத்துவமனை பதிவுகளை நம்பியிருந்தனர். கொலை நிராகரிக்கப்படவில்லை. சூழ்நிலை ஆதாரங்களை வைத்து சிபிஐயால் தீர்மானிக்க முடியும்.
இப்போது திரிமூர்த்தி துறைகள் மிகப்பெரிய ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர், இதன் மூலம் சிபிஐ இது உண்மையில் சதி மூலம் கொலை என்பதை நீதிமன்றத்தில் எளிதில் நிரூபிக்கும் என நான் நம்புகிறேன் என பதிவிட்டு இருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details