தமிழ்நாடு

tamil nadu

யார் உண்மையான சிவசேனா? சபாநாயகரின் முடிவு சரிதானா? உத்தவ் அணிக்கு என்ன சிக்கல்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 5:30 PM IST

மகாராஷ்டிர அரசியலில் நீண்ட நாள் நீடித்த பிரச்சினைக்கு அண்மையில் தீர்வு காணப்பட்ட நிலையில், சபாநாயகரின் உத்தரவு முரணாக உள்ளதாகவும், அது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் உத்தவ் அணி தெரிவித்து உள்ளது. அதுகுறித்து மாநிலங்களவை முன்னாள் செயலாளர் விவேக் கே. அக்னிகோத்ரி விவரிக்கிறார்...

Etv Bharat
Etv Bharat

மும்பை :மகாராஷ்டிர அரசியலில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சிவசேனா பிரச்சினையில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி தீர்வு காணப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து உண்மையான சிவசேனாவை மகாராஷ்டிர சட்டப் பேரவையில் சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்தார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவே உண்மையான சிவசேனா என அவர் உத்தரவிட்டது பல்வேறு சர்ச்சை மற்றும் சலசலப்பை மாநில அரசியலில் ஏற்படுத்தியது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் 16 எம்.எல்.ஏக்களை பதவி செல்லுபடியாகும் என சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்தது உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த அறிவிப்பால் மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரும் வரை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு யாரும் ஆட்டம் காட்ட முடியாது எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாகவும் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அணி தெரிவித்து உள்ளது. சட்டப்பேரவை சபாநாயகரின் உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் உத்தவ் அணி கூறுகையில் சபாநாயகரின் உத்தரவை காலாவதியாக்க முடியுமா? யார் உண்மையான சிவசெனா என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி.

சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் குறித்து முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், யார் உண்மையான சிவசேனா என சபாநாயகர் அறிவித்தது நீதிமன்ற அவமதிப்பு என உத்தவ் தரப்பில் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடித்தது.

பதவி பங்கீட்டில் சமரசம் எட்டாத நிலையில் காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நீடித்த நிலையில், முதலமைச்சராக உத்தவ் தாக்ரே நீடித்து வந்தார்.

இந்நிலையில் தான் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மீதான அதிருப்தியில் ஒன்று திரண்ட 39 எம்.எல்.ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணியாக சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினர். மேலும், மகாராஷ்டிர முதலமைச்சராகவும் ஏக்நாத் ஷிண்டே பதிவியேற்றுக் கொண்டார்.

பெருவாரியான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை மேற்கொள்காட்டி சிவசேனா கட்சியின் பெயர் சின்னம் உள்ளிட்டவற்றை தங்கள் தரப்புக்கு ஏக்நாத் ஷிண்டே அணி பெற்றுக் கொண்டது. ஒருங்கிணைந்த சிவசோனவின் கொறடாவாக இருந்த எம்.எல்.ஏ. சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ராகுல் நர்வேகாருக்கு கடிதம் வழங்கினார்.

அதேபோல் ஷிண்டே தரப்பு உத்தவ் தாக்கரே அணியின் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கடிதம் வழங்கியது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் சபாநாயகர் காலம் தாழ்த்திய நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஷிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை உடனே எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என முறையிட்டது.

இந்த விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தகுதி நீக்கம் தொடர்பான விளக்கம் கேட்டு சிவசேனாவின் இரு அணிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

தொடர்ந்து எம்.எல்.ஏக்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்கள் குறித்து நடவடிக்கை எடுத்த சபாநாயகர் ஷிண்டே தரப்பே உண்மையான சிவசேனா என அறிவித்தார். இருப்பினு, தகுதி நீக்கம் குறித்த கேள்வியில் முடிவெடுக்கத் தவறியதால், சபாநாயகரின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் ஒத்துப்போகவில்லை என உத்தவ் தாக்கரே குழு தெரிவித்து உள்ளது. மேலும் இது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக தாக்ர்ரே குழு தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க :மக்களவை தேர்தல் - கூட்டணி முடிவில் அதிரடி - மாயாவதி கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details