தமிழ்நாடு

tamil nadu

24 மணிநேரமும் மதுபானங்கள் கிடைக்கும்: உச்சத்தில் கள்ளச்சந்தை விற்பனை!

By

Published : Oct 17, 2020, 4:18 PM IST

பாலக்கோடு பகுதிகளில் 24 மணி நேரமும் மதுபான விற்பனை நடைபெற்று வருவது குறித்த காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

illegal liquor selling
illegal liquor selling

தருமபுரி: சட்டவிரோதமாக நடந்துவரும் மதுவிற்பனை தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் மூன்று ஆண்டுகளாக மதுபானக் கடைகள் இல்லாமல் இருந்தது. தற்போது ஒரு மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடை திறக்கப்பட்டதால் சிலர் மதுபானங்களை ஒட்டுமொத்தமாக வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.

டாஸ்மாக் மதுபானக் கடை காலை 10 மணிக்கு திறக்கப்படுவதால், மதுபிரியர்கள் காலை 6 மணி முதலே கள்ளத்தனமாக மதுபானங்களை வாங்கி பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து அருந்தி வருகின்றனர். 50 ரூபாய்க்கு 90மில்லி முதல் புல் குப்பி 750 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சட்டவிரோத மதுபான விற்பனை குறித்த வைரல் காணொலி

அரசுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. மது பாட்டில்களை விற்பனை செய்வதும், மது பிரியர்கள் பேருந்து நிலையத்தில் மது அருந்துவதும் போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details