தமிழ்நாடு

tamil nadu

பிபா உலகக்கோப்பை: தென் கொரியாவை வீழ்த்தி பிரேசில் காலிறுதிக்கு தகுதி..

By

Published : Dec 6, 2022, 7:26 AM IST

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறியது.

பிபா உலககோப்பை: தென்கொரியாவை வீழ்த்தி பிரேசில் காலிறுதிக்கு தகுதி..
பிபா உலககோப்பை: தென்கொரியாவை வீழ்த்தி பிரேசில் காலிறுதிக்கு தகுதி..

தோஹா(கத்தார்):22-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நள்ளிரவு 12.30 மணிக்கு தோஹாவில் உள்ள ராஸ் அபு அபவுத் ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக ஆடினர்.

முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார். இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறியது.

இதையும் படிங்க:உலகக்கோப்பை கால்பந்து... காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

ABOUT THE AUTHOR

...view details