ஈரானின் துணை ராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையில் (ஐ.ஆர்.ஜி.சி) பிரிகேடியர் ஜெனரலாகவும், அணு அறிவியலாளராகவும் இருந்தவர் மொஹ்சென் ஃபக்ரிசாதே. ஈரான் நாட்டின் அணு ஆயுத திட்டங்களுக்கு தலைமைத் தாங்கி செயல்படுத்தி வந்த இவர் கடந்த 27 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையின் பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் கூட்டுச் சதி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் குற்றம்சாட்டியுள்ளார். ஈரானின் இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்துள்ளது.