மாஸ்கோ:ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த 'ஸ்பூட்னிக் வி' கரோனா தடுப்பு மருத்தை சில உலக நாடுகளும், அந்நாட்டில் உள்ள பெரிய மருந்து நிறுவனங்களும் அரசியலாக்கி அதனை அவதிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "முதலில் ஸ்பூட்னிக் வி தடுப்பு மருந்தை அரசியலாக்கிய சிலர், கண்ணியமற்ற முறையில் தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மையை குலைக்கும் வகையிலான செயல்பாடுகளை செய்து வருகின்றனர். பிற நாடுகளுக்கு ஸ்பூட்னிக் வி சென்றுவிடாமல் தடுக்கும் வகையில் சில உலக நாடுகளும், அங்குள்ள பெரிய மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன." என்றார்.