தமிழ்நாடு

tamil nadu

யுஏஇ இளவரசருடன் தொலைபேசியில் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர்

By

Published : Feb 7, 2021, 7:13 PM IST

இஸ்லாமபாத்: ஐக்கிய அரபு இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்வுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருநாட்டு உறவை வலுப்படுத்தல் தொடர்பாக தொலைபேசியில் கலந்துரையாடினார்.

பிரதமர்
பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து தொலைபேசியில் பேசினர்.

இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரு தலைவர்களும் பாகிஸ்தானுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் தற்போதுள்ள நெருக்கமான உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்தவது தொடர்பாக கலந்துரையாடினார்கள். மேலும், கோவிட் -19 தொற்றுநோய் காலக்கட்டம் தொடர்பாகவும், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

கிடைத்த தகவலின்படி, 2019இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் அந்நிய செலாவணிகளை வலுப்படுத்துவதற்காக வழங்க முடிவு செய்தது. அதில், மீதமுள்ள 1 பில்லியன் டாலர் வரும் மார்ச் மாதத்தில் அளிக்கப்படவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் பிரதமர் தொலைபேசி அழைப்பு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details