ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த மாதம் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு படை தளபதியும், அந்நாட்டு போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க விமானத் தளங்கள் மீதுஈரான் ஏவுகணைத் தாக்குதல்நடத்தியது.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 109 அமெரிக்க படையினருக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தலைமைகமான பெண்டகன் தற்போது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெண்டகன் வெளியிட்டிருந்த அறிக்கையில், "ஈராக்கின் அல்-அசாத் விமானத் தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் அமெரிக்க வீரர்களுக்கு முளையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு 64ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 109 ஆக உயர்ந்துள்ளது.