இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'வாத்தி'(Vaathi). இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படம் முழுவதும் தெலுங்கு படம் மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுத்துள்ளதால் டப்பிங் பாதி இடங்களில் தெலுங்கு படம்போன்று உள்ளதாக கூறப்படுகிறது. கல்வி தனியார்மயம் ஆகுவதை பற்றி சொல்லும் படமாக இருந்தாலும் அதற்கான அழுத்தமான காட்சிகள் இன்றி மோசமான திரைக்கதை படத்தை ரசிக்க வைக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறு படம் கவலையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் குறைவில்லாமல் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் இப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.51 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது தனுஷ் படங்களுக்கு இதுவரை இல்லாத ஓபனிங் என்றும் தெரிவித்துள்ளனர். தனுஷின் கடைசி படமான 'நானே வருவேன்' சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது வாத்தி திரைப்படம் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.