தமிழ்நாடு

tamil nadu

சிம்புவின் 'பத்து தல' புதிய வசூல் சாதனை.. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பெருமிதம்!

By

Published : Apr 7, 2023, 7:46 PM IST

அன்மையில் சிம்பு நடித்து திரையரங்குகளில் வெளியான பத்து தல திரைப்படம் 2 வாரங்களை கடந்து நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனைத்தொடர்ந்து படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதில் படக்குழு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

சிம்பு திரை வாழ்வில் அதிக வசூல் ஈட்டிய "பத்து தல
சிம்பு திரை வாழ்வில் அதிக வசூல் ஈட்டிய "பத்து தல

சென்னை: கடந்த மாதம் 30ம் தேதி சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் தங்கள் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தில் ஏஆர் ரகுமானின் இசை கூடுதல் சிறப்பினை பெற்றுத்தந்துள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்மையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

தற்போது வரை திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றி குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,“எங்களின் 'பத்து தல' திரைப்படம் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 500 திரையரங்குகளிலும் இன்று இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது.

எங்களின் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து இவ்வளவு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக, சிலம்பரசன் (STR) ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு முழு மனதுடன் எங்களது நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறோம். படம் குறித்துப் பாராட்டி அதை உயர்த்திய விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

'பத்து தல திரைப்படம் சிலம்பரசனின் கரியரில் அதிக வருவாயை ஈட்டிய ஒரு படமாக மட்டுமல்லாமல், எங்களின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் லாபம் தந்திருக்கக்கூடிய படமாகவும் அமைந்ததுள்ளது. சிலம்பரசன் (STR) இந்தப் படத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து, அவரது சிறப்பான ஆதரவைக் கொடுத்து உதவியுள்ளார். குறிப்பாக இசை வெளியீட்டு விழா மற்றும் புரோமோஷன்களின் போது கலந்து கொண்டு படத்திற்கு ஒரு பெரிய கவன ஈர்ப்பைக் கொண்டு வந்து படம் பல வழிகளில் வெற்றிபெற உதவியதற்காக அவருக்கு எங்களது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம்.

இதனைத்தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மானுக்கு எங்களது சிறப்பு நன்றி. ரஹ்மான் சார் தனது பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியில் எங்கள் படத்திற்கு எல்லா வகையிலும் ஆதரவு அளித்து, பல வாரங்களாக முதலிடத்தில் இருக்கும் சார்ட்பஸ்டர் பாடல்களைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் அருமையான பின்னணி இசையைக் கொடுத்ததோடு மட்டுமின்றி இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மற்றும் புரோமோஷன்களில் ஒரு பகுதியாக இருந்தது படத்திற்குப் பெரிதும் உதவியது.

திரைப்படத்தின் இந்த மூன்று வருட பயணத்தில் தனது உற்சாகத்தைத் தக்கவைத்து, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில், தரமான கமர்ஷியல் எண்டர்டெய்னரை கொடுத்த இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். மேலும் படத்தின் பல்வேறு உரிமைகளைச் சிறந்த விலையில் விற்க, படத்தின் மீதான அவரது ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இந்தப் படம் சுமுகமாக முடிந்து வெளிவருவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தது.

இதன் தொடர்ச்சியாக அவர், படத்திற்கு அனைத்து வழிகளிலும் தன்னுடைய முழு ஆதரவை வழங்கிய அன்பான கெளதம் கார்த்திக் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். படத்தின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய மற்ற கலைஞர்கள் பிரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், டீஜே அருணாச்சலம், அனு சித்தாரா, மது குருசுவாமி, ரெடின் கிங்ஸ்லி, கவிஞர் மனுஷ்யபுத்திரன், சென்றாயன், சௌந்தரராஜா மற்றும் பிறருக்கும் எங்கள் நன்றிகள் என படக்குழு அனைவருக்கும் தன் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் படத்தில் அமைந்த 'நடன சென்சேஷன்' சாயிஷா சைகலின் நடனம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. ராவடி பாடலின் மூலம் தன் பிரமிக்கவைக்கும் நடனத்தை வெளிப்படுத்திப் பட வெற்றிக்கு உதவினார். கடைசி நேரத்தில் நடனத்தில் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்ததற்காக அவருக்கும் எங்களது ஸ்பெஷல் நன்றி என்றும் தொழில் நுட்பக்குழுவான ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே பாஷா, எடிட்டர் பிரவீன் கேஎல், கலை இயக்குநர் மிலன்,

ஆடை வடிவமைப்பாளர் உத்ரா மேனன், வசனம் எழுதிய ஆர்.எஸ். ராமகிருஷ்ணன், ஆடியோகிராஃபர் எஸ்.சிவக்குமார், சவுண்ட் டிசைனர் கிருஷ்ணன் சுப்ரமணியன், ஆக்ஷன் கோரியோகிராஃபர் சக்தி சரவணன், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் என இத்தனைக் காலம் இந்தப் பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து பொறுமையாகப் பயணித்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எங்கள் நன்றி என மனம் நெகிழ தன் நன்றிகளைத் தெரிவித்தார்.

இது ஒரு புறம் இருக்கப் படத்தின் வெளியீட்டைச் செய்து கொடுத்ததற்காக உலகம் முழுவதும் உள்ள எங்கள் வினியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்று 1,200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு 2வது வாரத்திலும் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் தொடர்ந்து ஓடுவதையும் உறுதி செய்துள்ளனர்.

அவர்களின் பெரிய ஆதரவுதான் படத்தை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெறச் செய்துள்ளது என பெருமிதத்துடன் எங்கள் மீது நம்பிக்கை வைத்து 'பத்து தல' திரைப்படத்தை ஆதரித்த மியூசிக் பார்ட்னர் சோனி மியூசிக், டிஜிட்டல் மற்றும் ஓடிடி பார்ட்னர் அமேசான் பிரைம், சேட்டிலைட் பார்ட்னர் ஜீ தமிழ் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்து எங்களின் அடுத்த படத்துடன் விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் என்று தன் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நோக்கில் படக்குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Indian 2: தைவானில் இந்தியன் 2 படக்குழு; புதிய அப்டேட் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details