திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வருபவர் பைனான்ஸ் அதிபர் பாலசுப்பிரமணி. இவரிடம் அறிவழகன் என்பவர் நண்பராக அறிமுகமாகி தன்னுடன் சேர்ந்து பைனான்ஸ் தொழில் செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என கூறியுள்ளார். மேலும், தனது மனைவியின் தங்கையை பைனான்ஸ் அதிபர் பாலசுப்பிரமணியத்திற்குதிருமணம் செய்துதருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய பாலசுப்பிரமணி, அறிவழகனின் வங்கி கணக்கில் மூன்று ஆண்டுகளாக மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். மேலும், திருமணம் செய்துதருவதாகக் கூறி 50 சவரன் தங்க நகைகளையும் வாங்கியுள்ளார்.