தமிழ்நாடு

tamil nadu

வெட்டுக் காயங்களுடன் உடல் மீட்பு- காவல்துறை விசாரணை!

By

Published : Apr 29, 2021, 8:57 PM IST

ராமநாதபுரம்: வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தவரின் உடலை மீட்ட காவல் துறையினர், தொடர்ந்து தீவிர விசாரணைத் தொடங்கியுள்ளனர்.

வெட்டுக்காயங்களுடன் ஒருவர் உடல் மீட்பு போலீசார் விசாரணை
வெட்டுக்காயங்களுடன் ஒருவர் உடல் மீட்பு போலீசார் விசாரணை

ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் சத்திரம் பகுதியில் நேற்றிரவு(ஏப்.29) வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனே கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், தேவிப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details