தமிழ்நாடு

tamil nadu

மணல் கடத்தல் வழக்கில் கனிமவளத் துறை உதவி இயக்குநர் கைது

By

Published : Apr 10, 2022, 9:56 AM IST

ஆற்று மணல் கடத்தல் வழக்கில் சிபிசிஐடி போலீசார், ஊட்டி கனிமவளத் துறை உதவி இயக்குநர் சபியாவை கைது செய்தனர்.

கனிமவளத் துறை உதவி இயக்குனர் கைது
கனிமவளத் துறை உதவி இயக்குனர் கைது

திருநெல்வேலி:2019ஆம் ஆண்டு அம்பாசமுத்திரம் பொட்டல் பகுதியில், கேரளா மாநிலத்தை சேர்ந்த மலங்கரா கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை கோட்டையத்தை சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து, அரசு ஒப்புதலுடன் குவாரி அமைத்தார்.

அதில், எம்-சாண்ட் மணல் தயாரித்து கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வந்தார். இதனிடையே 2020ஆம் ஆண்டு, எம்-சாண்ட் என்னும் பெயரில் ஆற்று மணலை கேரளாவுக்கு கடத்தியதாக ஜார்ஜ் மீது கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதனடிப்படையில் கைது செய்யப்பட்டார். அதுதொடர்பான வழக்கில், சட்டத்துக்கு புறம்பாக 27 ஆயிரத்து 776 கியூபிக் மீட்டர் மணலை கொள்ளை அடித்ததாக கூறி, சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் குவாரிக்கு 9 கோடியே 56 லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்.

அத்துடன் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து வழக்கு, 2021ஆம் ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், லங்கரா கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த குவாரி நில உரிமையாளர்கள் 6 பேர் சேர்க்கப்பட்டனர்.

இவர்களும் பிப்ரவரி 5ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வழக்கிற்கும் திருநெல்வேலியின் அப்போதைய கனிமவளத் துறை உதவி இயக்குநர் சபியாவுக்கும் தொடர்பிருந்தது தெரியவந்தது. இதனிடையே சபியா ஊட்டிக்கு மாற்றப்படிருந்த நிலையில், இன்று (ஏப். 10) திருநெல்வேலியில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: சட்டவிரோத ஆற்று மணல் கடத்தல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details