தமிழ்நாடு

tamil nadu

தகவல் ஆணைய தலைவர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

By

Published : Oct 29, 2021, 8:07 PM IST

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் கிளையை மதுரையில் அமைக்கக் கோரிய வழக்கில், இது குறித்து தகவல் ஆணையத்தின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

மதுரை:திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த கோவிந்த் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "2010ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அறியும் வசதியானது ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும் பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் பொது தகவல் அலுவலர்கள், உரிய முழுமையான தகவல்களை வழங்காத காரணத்தால், இரண்டாம் மேல்முறையீட்டு மனுவினை பொதுமக்கள் தாக்கல் செய்யலாம். அவை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றன.

தகவல் ஆணைய தலைவர் பதிலளிக்க உத்தரவு

இந்த வழக்கு விசாரணையின்போது பொதுமக்கள், சென்னைக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. இதனை சரிசெய்ய மதுரையில் மாநில தகவல் ஆணையத்தின் கிளையை அமைக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோர் அமர்வு, “வழக்கு குறித்து தகவல் ஆணையத்தின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு -குற்றவாளிகளின் வழக்கறிஞர் பதிவு சஸ்பென்ட்

ABOUT THE AUTHOR

...view details