தமிழ்நாடு

tamil nadu

தீபாவளி: மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

By

Published : Nov 4, 2021, 8:09 PM IST

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சில தினங்களாக கிலோ ரூ.2 ஆயிரம் வரை மல்லிகை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

deepavali-farmers-are-happy-with-the-increase-in-the-price-of-jasmine-to-rs-2000-per-kg
தீபாவளி: மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரம் வரை விலையேற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகை, முல்லை, கோழிக்கொண்டை, செண்டுமல்லி உள்ளிட்டப் பல்வேறு ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

சுமார் 25ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ரூ.2ஆயிரம் வரை விற்கப்பட்ட மல்லிகை

சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகைப்பூ பிரதானத் தொழிலாக இருப்பதால், தினந்தோறும் சத்தியமங்கலம் மலர்ச்சந்தையில் 10 டன் பூக்கள் விற்பனையாகின்றன. கடந்த மாதம் கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட மல்லிகை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கிலோ ரூ.2 ஆயிரம் வரை ஏலம் போனது.

விவசாயிகள் முன்னிலையில் ஏலம் விடுவதால் இடைத்தரகர்கள் இன்றி, தினந்தோறும் ரூ.10 ஆயிரம் வரை வருவாய் கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கிலோ ரூ.250-க்கு விற்கப்பட்ட முல்லை ரூ.1280-க்கும்; கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட காக்காட்டான் பூ கிலோ ரூ.1575-க்கும் கனகாம்பரம் ரூ.1600-க்கும் அரளி ரூ.160-க்கும் விற்பனையானது.

நடப்பாண்டு மல்லிகைப் பூ வியாபாரம் நல்ல வருவாயை ஈட்டித்தந்ததால், விவசாயிகள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர்.

இதையும் படிங்க: ரசிக்கும்படி 90’ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிய 'தல' தீபாவளி

ABOUT THE AUTHOR

...view details