ஈரோடு: மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் அடுத்த தாசன்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் நாகலிங்கம், இவரது மனைவி கமல சங்கரி. இவர்களுக்கு காயத்ரிதேவி, காவியா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், அருள் நாகலிங்கம் ஈரோடு, கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே சித்த மருத்துவமனை நடத்திவருகிறார். இதனையடுத்து மருத்துவமனைக்கு பின்புறமுள்ள தாசன் காட்டுப்புத்தூரில் கடந்த 11 மாதத்திற்கு முன்பு புதிதாக வீடு வாங்கி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, சித்தா மருத்துவர் அருள் நாகலிங்கம் நேற்று (நவ.19) மயிலாடுதுறைக்குயில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டார். அப்போது வீட்டில் அவரது மனைவி, இரண்டு மகள்கள் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று(நவ.20) காலை தனது சித்த மருத்துவமனைக்குச் சென்ற கமல சங்கரி மற்றும் இரண்டு மகள்கள் மதியம் உணவுக்கு வீட்டிற்கு வந்துள்ளனர்.