தமிழ்நாடு

tamil nadu

கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வர் மீது பாய்ந்தது போக்சோ

By

Published : Nov 13, 2021, 6:08 PM IST

Updated : Nov 17, 2021, 1:52 PM IST

ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தனியார் பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன்
கோவை மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன்

கோயம்புத்தூர்: ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் போக்சோ, தற்கொலைக்குத் தூண்டுதல் வழக்குகளின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டமாக அந்தத் தனியார் பள்ளியின் முதல்வர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கோவை துணை ஆணையர் ஜெயச்சந்திரன், இந்தச் சம்பவம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததற்காக அப்பள்ளியின் முதல்வர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோவை மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் கைது

Last Updated :Nov 17, 2021, 1:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details