தமிழ்நாடு

tamil nadu

அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப்பட்டா இடம் சுடுகாடாக உள்ளதால் அதிர்ச்சி; மாற்று இடத்திற்காக நடையாக நடக்கும் பயனாளிகள்

By

Published : Aug 3, 2022, 3:45 PM IST

பொள்ளாச்சி அடுத்த சுப்பே கவுண்டன் புதூரில், அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான இடத்தில் சுடுகாடாக இருந்ததனால் பயனாளிகள், பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி வைத்துள்ளனர்.

வீட்டுமனைப் பட்டா
வீட்டுமனைப் பட்டா

கோவை:பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர், சுப்பே கவுண்டன்புதூர் பகுதியைச்சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடந்த 2016ஆம் ஆண்டு தங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என மனு அளித்திருந்தனர்.

இந்த மனுவைப்பரிசீலத்த அலுவலர்கள் ஆத்துப்பொள்ளாச்சி ஊராட்சிக்குட்பட்ட மணக்கரை பகுதியில் தலா 2 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக்கூறி வீட்டுமனைப்பட்டா வழங்கினர். பட்டா வழங்கியதோடு நிறுத்திக்கொண்ட அலுவலர்கள், அதன்பிறகு அதற்குண்டான முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து அலுவலர்களைச் சந்தித்த பயனாளிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தைத் தேர்வு செய்து அளிக்குமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள், 'ஆத்துப்பொள்ளாச்சி ஊராட்சியில் உள்ள மணக்கரை பகுதியில் உள்ளது. தாங்களே சென்று பார்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அங்கு சென்று பார்த்த பயனாளிகள் அதிர்ச்சிக்குள்ளானர்கள். காரணம், வீட்டுமனைக்கு பட்டா வழங்கிய இடம் சுடுகாடாக இருந்தது. அங்கு அப்பகுதி மக்கள் மயானமாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து 100-க்கும் மேலானோர் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென பலமுறை அலுவலர்களிடம் சென்று முறையிட்டனர். ஆனால், இன்றுவரை மாற்று இடம் வழங்காததால் அம்மக்கள் பரிதவித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ஆட்சிகள் மாறினாலும்; பொதுமக்களின் நிலை இப்படிதான் உள்ளது என்று கவலையுடன் வேதனைத்தெரிவிக்கின்றனர்.

சுடுகாட்டிற்கு பதிலாக மாற்று இடத்திற்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

இதையும் படிங்க: அரசு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details