தமிழ்நாடு

tamil nadu

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

By

Published : Oct 6, 2021, 8:30 PM IST

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை இன்று கோவை நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இந்த வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

கோயம்புத்தூர்:தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செப். 21ஆம் தேதி இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ், பாபு, ஹெரோன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்குக் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. மேலும், கடந்த 29ஆம் தேதி காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் விசாரணையை அக்.6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

விசாரணை ஒத்திவைப்பு

அதன்படி, கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் இன்று (அக். 6) ஆஜரான குற்றவாளிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 20ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தும், அதுவரை நீதிமன்ற காவல் நீட்டித்தும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details