தமிழ்நாடு

tamil nadu

திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! - கவிஞர் வைரமுத்து

By

Published : Apr 17, 2021, 12:28 PM IST

நடிகர் விவேக் இறப்பிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! - கவிஞர் வைரமுத்து
திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! - கவிஞர் வைரமுத்து

நகைச்சுவை நடிகரும், சமூக கருத்துக்களையும் தொடர்ந்து பேசி மக்களிடம் கொண்டு சேர்த்த சின்னக் கலைவாணருமான விவேக்கின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,

திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! - கவிஞர் வைரமுத்து

"எல்லோரையும் சிரிக்க வைத்த கலைஞன் அழ வைத்து போய்விட்டானே! திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன. கலைச் சரித்திரம் சொல்லும் நீ ‘காமெடி’ கதாநாயகன்” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details