தமிழ்நாடு

tamil nadu

உக்ரைன் போருக்கு நடுவே பாசப்போர் நடத்தி செல்ல நாயுடன் நாடு திரும்பிய மாணவி!

By

Published : Mar 6, 2022, 11:02 AM IST

ரஷ்யா - உக்ரைன் போருக்கு நடுவே, தான் செல்லமாக வளர்த்த நாயுடன்தான் நாடு திரும்புவேன் என்று இரண்டு நாட்கள் ஹங்கேரியில் காத்திருந்த பின், சென்னை திரும்பிய மாணவியின் பாசப் போராட்டம் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

மாணவி கீர்த்தனா
மாணவி கீர்த்தனா

சென்னை:உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில் அங்கிருக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் கடந்த பிப்.26ஆம் தேதியிலிருந்து ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. போர் சூழல் காரணமாக அங்கிருந்து எப்படியாவது நாடு திரும்பினால் போதும் என அனைவரும் தவித்து வரும் சூழலில், வந்தால் தன்னுடைய செல்ல பிராணியுடன்தான் நாடு திரும்புவேன் எனக் காத்திருந்த மாணவி கீர்த்தனா நேற்று (மார்ச் 5) சென்னை வந்தடைந்தார்.

செல்லப்பிராணி மீது பாசம்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா. இவர் உக்ரைனில் உள்ள உஸ்ராத் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 5ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைனில் அந்த நாய்க்குட்டியை வாங்கியதாகவும், மிகவும் பாசமாக வளர்த்து வருவதாகவும், என்னைப் பிரிந்து இருக்காது என்பதால் கரோனா தொற்று காலத்தில் கூட இரண்டு ஆண்டுகள் வீட்டிற்கு வராமல் நாயுடன் அங்கேயே இருந்தேன் என்று கீர்த்தனா கூறினார்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி கீர்த்தனா

பிரிய மனமில்லை

மேலும், "போர் சூழல் ஏற்பட்டவுடன் என்னுடைய நாய்க்குட்டியை விட்டு வர எனக்கு மனம் வரவில்லை. அத்துடன் என்னை விட்டால் அவனுக்கு யாரும் இல்லை. எனவே, அவனுடன் நாடு திரும்ப முடிவு செய்து கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் பேருந்து மூலம் பயணம் செய்து ஹங்கேரி வந்தடைந்தேன்.

அங்கு என்னுடைய நாய்க்குட்டியை அழைத்து வர அனுமதிக்காத காரணத்தால் இரண்டு நாட்கள் காத்திருந்து அதன் பின், என்னுடைய நாயை அழைத்து வர அனுமதித்த பின்னரே வந்துள்ளேன்" என்றார்.

என்னுடைய பெற்றோர் கூட வேறு நாய்க்குட்டி வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் என்று கூறினர். ஆனால் அவனை அந்தப் போர் சூழலில் தனியாக விட்டு வர மனமில்லாமல் என்னுடன் அழைத்து வந்தேன் என்றார்.

இதையும் படிங்க: உக்ரைன் போர்: மனிதநேய செயல்பாடுகளுக்கு 15 மில்லியன் டாலர் அளிக்கும் 'மெட்டா'

ABOUT THE AUTHOR

...view details