தமிழ்நாடு

tamil nadu

நீட் பயிற்சி நிறுவனங்களில சோதனை: ரூ.180 கோடி கண்டுப்பிடிப்பு!

By

Published : Oct 13, 2019, 7:06 PM IST

சென்னை: நாமக்கல், கரூர், உள்ளிட்ட 17 இடங்களில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் நடந்த வருமான வரித்துறை சோதணையில கணக்கில் வராத ரூ. 180 கோடி கண்டறிப்பட்டுள்ளது.

income tax raid

நாமக்கல், கரூர், சென்னை உள்ளிட்ட 17 நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மாணவர்களிடம் ரூ.180 கோடி வரை பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சுமார் 30 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்த அலுவலர்கள் மீதமுள்ள ரூ.150 கோடி குறித்த விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

மாணவர்களிடம் முறைகேடாக வசூலித்த 180 கோடியில், ரூ.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து மேலும் ரூ.150 கோடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து வருமானவரித் துறையினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'வருமானவரித் துறையின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் அதில் குறிப்பாக நீட் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டண பயிற்சி வகுப்புகளில் கடந்த 11ஆம் தேதி முதல் சோதனைகள் நடத்தப்பட்டது.

நாமக்கல், பெருந்துறை, கரூர், சென்னை உள்ளிட்ட 17 பகுதிகளில் உள்ள தொழில், கட்டுமானம், கல்வி நிலையங்கள் அதன் உரிமையாளர் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களிடம் கூடுதலாகவும், முறைகேடாகவும் கட்டணங்கள் வசூலிப்பதோடு அதற்காக பெற்றோரிடம் கொடுக்கும் போது ஒரு ரசீதும், பின்னர் வருமானவரித் துறைக்கு வேறு மாதிரியான ரசீதுகளும் தயாரித்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக அளித்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்டது.

மேலும் இந்த முறைகேடுகளுக்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது. இது குறித்தும் வருமானவரித் துறையினர் விசாரனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: நீட் பயிற்சி மையங்களில் இரண்டாம் நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை!

ABOUT THE AUTHOR

...view details