தமிழ்நாடு

tamil nadu

2022-ம் ஆண்டிற்கான "சிறந்த திருநங்கை விருது" அ.மர்லிமாவுக்கு வழங்கப்பட்டது!

By

Published : Apr 18, 2022, 10:50 PM IST

திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு "சிறந்த திருநங்கை விருது" வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (18.4.2022) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவரை சிறப்பிக்கும் வகையில், 2022-ம் ஆண்டிற்கான "சிறந்த திருநங்கை விருது" வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அ.மர்லிமாவின் 25 ஆண்டுகால சேவையைப் பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுக்கான 1 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிழை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் த.ரத்னா, மாநில திட்டக் குழு உறுப்பினர் டாக்டர் நர்த்தகி நடராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் மின் வெட்டே ஏற்படாது - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details