தமிழ்நாடு

tamil nadu

TN Weather: பொங்கல் தினம் வரை வானிலை இதுதான்!

By

Published : Jan 9, 2022, 1:29 PM IST

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஜனவரி 13ஆம் தேதிவரை லேசான மழை பெய்யக்கூடும் எனவும் பிற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

TN Weather
TN Weather

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன. 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றும் நாளையும் (ஜன. 8) தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜனவரி 11, 12, 13 நிலவரம்

தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 13ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

இன்று முதல் நாளை மறுதினம் (ஜன.11) வரை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள், அதனை ஒட்டியுள்ள பூமத்தியரேகை பகுதிகளில் (1.5 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: கரோனா பிடியில் நாடாளுமன்றம்; 400 பேர் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details