தமிழ்நாடு

tamil nadu

என்ன செய்ய...இப்ப நான் என்ன செய்ய - அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்

By

Published : Sep 30, 2021, 2:32 PM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள்மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tasmac stores
Tasmac stores

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அக். 4ஆம் தேதி முதல் அக் 9ஆம் தேதிவரை டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும் என தமிழ்நாடு தேர்தல ஆணையம் கேட்டுக்கொண்டதன் பேரில் தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.

மேலும், உத்தரவை மீறுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உச்சத்தில் மது விலை - மது பிரியர்கள் சோகம்

ABOUT THE AUTHOR

...view details