தமிழ்நாடு

tamil nadu

அவரு எங்க அண்ணன்.. ராக்கி கட்டி பாசமழை பொழிந்த தமிழிசை!

By

Published : Aug 15, 2019, 6:03 PM IST

Updated : Aug 15, 2019, 6:59 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக  தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ரக்ஷபந்தனை முன்னிட்டு  முதலமைச்சருக்கு ராக்கி கயிறு கட்டி சகோதர பாசத்தை வெளிப்படுத்தினார்.

Rocky

73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 448 கோயில்களில் சிறப்பு வழிபாடு, சமபந்தி நிகழ்வு நடத்த வேண்டும் என இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் ஒவ்வொரு பகுதியில் உள்ள கோவில்களிலும் நடந்த சிறப்பு வழிபாடு, சமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சமபந்தி விருந்தில் உணவு அருந்தும் முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்துவிட்டு கே.கே. நகர் வரசக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். அவர்களை எம்.எல்.ஏ ரவி, இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர் வரவேற்றனர்.

தமிழிசை சவுந்தர்ராஜன் முதலமைச்சருக்கு ராக்கி கட்டினார்

அப்போது அங்குவந்திருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ரக்ஷபந்தனை முன்னிட்டு முதலமைச்சருக்கு ராக்கி கயிறு கட்டி சகோதர பாசத்தை வெளிப்படுத்தினார்.

Intro:Body:****** இதற்கான விசுவல் தலைமை செயலக மெயிலில் (DIPR) உள்ளது. செக் செய்யவும்.

முதல்வருக்கு ராக்கி கட்டிய தமிழிசை

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை ராக்கி கட்டினார்.

73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 448 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி நிகழ்வு நடத்த வேண்டும் என அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டிருந்தார். இதையொட்டி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் ஒவ்வொரு பகுதி கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கோட்டை கொத்தளத்தில் தேசிய கோடியை ஏற்றி வைத்த முதல்வர் பழனிசாமி கே.கே. நகர் வரசக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்றார். அவரை விருகை எம்எல்ஏ ரவி, அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர் வரவேற்றனர். அப்போது அங்கு வந்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை ரக்ஷபந்தனை ஒட்டி முதல்வருக்கு ராக்கி கயிறு கட்டி சகோதர பாசத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து இருவரும் சமபந்தி விருந்தில் உணவு அருந்தினர். Conclusion:
Last Updated :Aug 15, 2019, 6:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details