தமிழ்நாடு

tamil nadu

விடுதியில் சக பெண் அரசு மருத்துவருக்கு பாலியல் வன்புணர்வு

By

Published : Nov 19, 2021, 5:33 PM IST

கரோனா தனிமைப்படுத்துதல் காரணமாக விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது சக அரசு பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

police arrest two doctors for rape
police arrest two doctors for rape

சென்னை:ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணியாற்றி வந்த செல்வன், ராஜன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரண்டு மருத்துவர்களும் கரோனா பிரிவில் பணியாற்றிவந்ததால், பாதுகாப்பு காரணமாக தி. நகரில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுடன் பணியாற்றிய இரு பெண் மருத்துவர்களும் அதே விடுதியில் தங்கியிருந்தனர்.

இதனை பயன்படுத்திக்கொண்ட செல்வன், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதேபோல் மற்றொரு மருத்துவரான ராஜன் வேறொரு பெண் மருத்துவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பெண் மருத்துவர்கள் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் மருத்துவர் செல்வன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கும், மருத்துவர் ராஜன் மீது பாலியல் தொல்லை வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. சக மருத்துவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான இச்சம்பவம் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:15 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்

ABOUT THE AUTHOR

...view details