தமிழ்நாடு

tamil nadu

'முதுகலைப் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு'

By

Published : Dec 29, 2019, 1:28 PM IST

சென்னை: தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட் 2020) எழுதுவதற்கு ஜனவரி 7ஆம் தேதி முதல் 31 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணாப்பல்கலைக் கழகம்
அண்ணாப்பல்கலைக் கழகம்

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள், மண்டல கல்லூிகள், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் சுயநிதி பொறியியல் கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2020-21ஆம் கல்வியாண்டில் சேரலாம். ஒருசில பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகளில் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேரலாம்.

எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு ஜனவரி 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை annauniv.edu. tancet.annauniv.edu/tancet/# என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அப்போது, மாணவர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல், அலைபேசி எண்ணை பயன்படுத்த வேண்டும். தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

மாணவர்களுக்கான தேர்வுகூட நுழைவுச்சீட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிடப்படும். எம்.சி.ஏ. படிப்புக்கு பிப்ரவரி 29ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ. படிப்புக்கு பிப்ரவரி 29ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புக்கு மார்ச் 1ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நுழைவுத் தேர்வு நடைபெறும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 நகரங்களில் தேர்வு நடத்தப்படும். இதன் முடிவுகள் மார்ச் 20ஆம் தேதி வெளியிடப்படும். மார்ச் 23ஆம் தேதி தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details