தமிழ்நாடு

tamil nadu

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

By

Published : Oct 21, 2021, 6:07 AM IST

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்த ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

சென்னை: அண்ணா சாலையிலுள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பருவமழையை எதிர்கொள்ள கூடிய வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். எனவே சீரான மின் விநியோகத்திற்கு துறை தயாராக இருக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது. பல மாநிலங்களில் மின் தடை ஏற்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் மின்தடை இல்லாத வகையில் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய அரசின் மின்சந்தையில் இதுவரை 1.04 விழுக்காடு தான் நாம் மொத்த தேவையில் கொள்முதல் செய்கிறோம்.

அண்ணாமலைக்கு சவால் விட்ட செந்தில் பாலாஜி

அதுவும் நிலக்கரி பற்றாக்குறையினால் தான். குஜராத் தான் அதிகம் வெளிச்சந்தையில் மின் கொள்முதல் செய்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்டவைகள் உள்ளன. கடந்த கால ஆட்சியின் தவறுகளை சரிசெய்யும் வண்ணம் தான் தற்போது மின்வாரியத்தின் செயல்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு நான் வர தயார். அதுமட்டுமின்றி தன்னிடமுள்ள ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும். அப்படி இல்லையென்றால் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

அவர் தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார். ஆதாரம் இருந்தால் வழக்குத் தொடருங்கள் அதையும் சந்திக்க தயார்” என்றார்.

இதையும் படிங்க:கேரள வெள்ளம்: பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு உதவிட முன்வாருங்கள் - அண்ணாமலை அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details