தமிழ்நாடு

tamil nadu

மருத்துவ படிப்பில் சேரும் டாப் 10 அரசுப்பள்ளி மாணவர்கள்.. பட்டியல் வெளியீடு..

By

Published : Oct 17, 2022, 5:06 PM IST

7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு முதல் பத்து இடங்களை பெற்ற மாணவர்கள் பட்டியலை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு தேர்வான முதல் பத்து இடங்களை பெற்ற மாணவர்கள் பட்டியலை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தேவ தர்ஷினி 518 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

குரோம்பேட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவன் சுந்தர்ராஜன் 503 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். வேலூர் மாவட்டம், அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் பிரவீன் குமார் 481 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் எஸ் ஆர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி பிருந்தா 467 மதிப்பெண் பெற்று நான்காம் இடமும், ஈரோடு மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் ராகுல் 466 மதிப்பெண் பெற்று ஐந்தாம் இடமும் பெற்றுள்ளனர்.

மேலும் திருவள்ளூர் மாவட்டம் ஏ.எம்.கே அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி சத்யா தேவி 463 மதிப்பெண் பெற்று ஆறாம் இடமும், சேலம் மாவட்டம் நகராட்சி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவன் ராஜ்குமார் 455 மதிப்பெண் பெற்று ஏழாம் இடமும், சேலம் மாவட்டம் மாடல் பள்ளி மாணவன் சிவக்குமார் 446 மதிப்பெண் பெற்று எட்டாம் இடமும், சேலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா 444 மதிப்பெண் பெற்று ஒன்பதாம் இடமும், திருவண்ணாமலை மாவட்டம் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவன் தாசபிரகாசம் 439 மதிப்பெண் பெற்று பத்தாம் இடம் பிடித்துள்ளார்.

2022-2023 ஆண்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் செய்வதற்கான அரசு ஒதுக்கீட்டிற்கு முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளின் தரவரிசை பட்டியல் பின்வருமாறு:மதுரை மாவட்டம் மகாத்மா குளோபல் கேட்வே பள்ளி மாணவன் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று முதலிடமும், கோயம்புத்தூர் சுகுணா பி.ஜி.பி.பள்ளி மாணவி ஹரிணி 702 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், சென்னை ஆல்ஃபா பள்ளி சிபிஎஸ்சி மாணவர் சொக்கலிங்கம் 700 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும், கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் சஞ்சய் கிரிஷ் 700 மதிப்பெண் பெற்று நான்காம் இடமும், ஈரோடு மாவட்டம் சுகுணா பி.ஐ.பி பள்ளி மாணவன் சுதர்சன் 700 மதிப்பெண் பெற்று ஐந்தாம் இடமும் பெற்றுள்ளார்.

மேலும் நாமக்கல் மாவட்டம் கிரீன் பார்க் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி சுவேதா 696 மதிப்பெண் பெற்று ஆறாம் இடமும், சென்னை பி.எஸ்.பி.பி சீனியர் செகண்டரி பள்ளி மாணவி ஹரிணி 695 மதிப்பெண் பெற்று ஏழாம் இடமும், ஈரோடு மாவட்டம் நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளி மாணவன் பரத் 695 மதிப்பெண் பெற்று எட்டாம் இடமும், சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாணவன் ரிலீஸ் ரவிச்சந்திரன் 695 மதிப்பெண் பெற்று ஒன்பதாம் இடமும், சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளி சேர்ந்த மாணவன் ஸ்டீவ் மனோஜ் 695 மதிப்பெண் பெற்று பத்தாம் இடமும் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் - தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details