தமிழ்நாடு

tamil nadu

Govt to Repeal Farm laws: 'உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!'

By

Published : Nov 19, 2021, 11:25 AM IST

Updated : Nov 19, 2021, 12:05 PM IST

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப்போவதாக (Govt to Repeal Farm laws) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அறிவித்திருப்பது உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (CM MK Stalin) தெரிவித்துள்ளார்.

Govt to Repeal Farm laws
Govt to Repeal Farm laws

ஒரு ஆண்டிற்கு மேலான உழவரின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, மூன்று வேளாண் சட்டங்களும் (Farm Laws) திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அறிவித்துள்ளார். மேலும், அவர் டெல்லி எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உழவர் போராட்டத்தைக் கைவிட்டு தங்களது வீடுகளுக்குத் திரும்புமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இது குறித்து, ராகுல், சிதம்பரம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் (CM MK Stalin) தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், "மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்போவதாக (Govt to Repeal Farm laws) பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம். உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்.

அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Farm Laws: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

Last Updated : Nov 19, 2021, 12:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details