தமிழ்நாடு

tamil nadu

உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறிவது எப்படி..? - சிறப்பு தொகுப்பு

By

Published : Apr 25, 2022, 10:01 AM IST

உணவு பொருட்களில் இருக்கும் கலப்படத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது குறித்த காணலாம்.

உணவு பொருட்களில் கலப்படம் எப்படி
உணவு பொருட்களில் கலப்படம் எப்படி

உணவு பொருள்களில் கலப்படத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் ஈ டிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "பொதுவாக மக்கள் அனைத்து உணவுப் பொருட்களிலும் கலப்படம் உள்ளதாக நினைக்கிறார்கள், ஆனால் அப்படி நடைபெறுவது இல்லை, சில பொருட்களில் மட்டுமே கலப்படம் நடைபெறுகிறது.

குறிப்பாக சொல்லப்போனால் நாம் அத்தியாவசிய பொருளாக தினம்தோறும் பயன்படுத்த கூடிய பொருள்களில் கலப்படம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில வியாபாரிகள் மட்டுமே கலப்படத்தை செய்து அதிகம் லாபம் பார்க்கின்றனர். இவ்வாறு கலப்படம் மேற்கொள்ளும் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கையை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை எடுத்து வருகிறது. உணவுப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு தேவை என்றார். இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே இருந்தால் உடல் நலத்தை பார்த்துக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

பச்சை பட்டாணியில் கலப்படம் :பொதுமக்கள் நன்றாக பச்சை நிறமாக உள்ள பட்டாணியை வாங்க வேண்டாம். ஏனெனில் அதில் சாயம் பூசப்பட்டு இருக்கலாம். இதை கண்டறிய ஒரு டம்ளரில் கலப்படம் செய்யப்பட்ட பச்சை பட்டாணியை போட்டால், தண்ணீரில் பச்சை நிறத்தை வெளிக் கொண்டு வரும். இதிலிருந்து நாம் சாயம் பூசப்பட்ட பச்சைப் பட்டாணியை வாங்கக்கூடாது என்று தெரிகிறது.

உணவு பொருட்களில் கலப்படம் எப்படி

வாழைப்பழம் :ஒரு சில வியாபாரிகள் வாழைப்பழத்தை பழுக்க வைக்க சில ரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். வாழைக்காயில் ரசாயனத்தை தெளித்துவிடுகிறார்கள். இதன் காரணமாக இரண்டு நாட்களில் பழுக்க வேண்டிய வாழைப்பழம் ஒரு சில மணி நேரங்களில் பழுக்கிறது. மேலும் இந்த வாழைப்பழத்தை வாங்கும்போது அதன் காம்பு பகுதி பச்சை நிறமாக இருந்தால் வாழைப்பழத்தை வாங்கலாம். வாழைப்பழம் பழுத்தாலும் காம்பின் நிறம் மாறாது.

ஆப்பிள் :குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழமாக ஆப்பிள் உள்ளது. இந்த பழத்தின் மீது மெழுகினை பூசி ஒரு சில வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். ஆப்பிள் வாங்கும் போது விரல்களால் சுரண்டிப் பார்த்தால் மெழுகின் படிமண் காணப்படும். இப்படி இருக்கும் பழங்களை வாங்க வேண்டாம். மேலும் பழங்களை வாங்கி உண்ணும் போது கழுவி பயன்படுத்த வேண்டும்.

தர்பூசணி:தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், தர்பூசணி உள்ளிட்ட கோடைக்கால பழங்களில் வியாபாரம் அதிகரித்து உள்ளது. தர்பூசணி வாங்கும் போதும் மிகவும் சிவப்பாக இருக்கின்ற பழங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் அந்த பழங்களை சிவப்பாக வைக்க வேண்டுமென்று ஊசி மூலம் ரசாயனம் ஏற்றப்படுகிறது. தர்பூசணி வாங்கும்போது வெள்ளை துணியால் அதனைத் தொட்டுப் பார்த்தால் அந்த ரசாயனத்தின் படிமம் அந்தத் துணியில் காணப்படும்.

மேலும் தேன் தண்ணீரில் கரையாது, பொதுமக்கள் வாங்கும்போது சோதனை செய்து வாங்குவது நல்லது. மேலும் டீத்தூளில் இரும்புத்தூள், மரத்தூள் மற்றும் கலர் சேர்ப்பதற்கான ரசாயனம் உள்ளிட்டவை போடப்படுகிறது. டி தூள் கொதித்த பின்னரே கலர் மாற்றம் ஏற்படும்.

உணவு பொருட்களில் கலப்படம் எப்படி

இதனை கண்டறிய வெள்ளைத்துணியில் கொஞ்சம் டீ தூளை வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி தடவினால் எந்தக் கலரும் வரவில்லை என்றால் அது சுத்தமான டீத்தூள். அப்படி இல்லாமல் கலர் மாறினால் அது போலியான டீத்தூள். உடனடியாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். கலர் அப்பளங்களை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. மேலும் இந்த அப்பளங்களை தவிர்ப்பது நல்லது.

காஜி கத்லி ஸ்வீட் மேல் உள்ள இன் சில்வர் சீட் :காஜி கத்லியில் சில்வர் கோர்ட் இருக்க, மாட்டின் குடலை பயன்படுத்துகிறார்கள். உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் இல்லாத சில கடைகளில் இம்மாதிரியான காஜி கத்லி விற்கப்படுகிறது. தற்போது இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் உள்ள கடைகளில் மட்டுமே இனிப்புகளை வாங்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்க தனி வாட்ஸ்அப் எண் 94440 42322 அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்களை அளிக்கலாம் என தெரிவித்தார். கலப்படம் செய்த உணவுகளை உட்கொள்வதால், கேன்சர், ரத்த சோகை, உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என அவர் தெரித்தார்.

பட்டப்படிப்பில் வேதியல், உயிர்வேதியியல், மேற்படிப்பில் எம்பிபிஎஸ், மாஸ்டர் ஆப் கெமிஸ்ட்ரி உள்ளிட்ட துறைகளில் படித்தவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் அலுவலர்களாக சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க:முருங்கை மலர்த் தேன் உற்பத்தி: மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழிகாட்டும் நபர்!

ABOUT THE AUTHOR

...view details