தமிழ்நாடு

tamil nadu

பழைய இரும்பு குடோனில் தீ விபத்து!

By

Published : Jun 28, 2021, 6:21 PM IST

கொருக்குப்பேட்டையில் குடோனில் திடீரென்று ஏற்பட்ட தீயை சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் முற்றிலுமாக அணைத்தனர்.

குடோனில் தீ விபத்து
குடோனில் தீ விபத்து

சென்னை: கொருக்குப்பேட்டை மண்ணப்பன் தெருவில் பழைய இரும்பு குடோன் வைத்துள்ளவர் வேலு. இன்று(ஜூன்.28) அதிகாலை அந்த குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக சம்பவம் தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஐகோர்ட், சத்தியமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து ஐந்து வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குடோனில் தீ விபத்து

சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தின்போது அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் வீடுகளில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மேலும் அங்கிருந்த ஏசி மெஷின், தண்ணீர் பைப்கள் போன்றவை முழுவதுமாக சேதமடைந்தன.

குடோனில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பழைய பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின. தீ விபத்து நடந்த இடம் மிக குறுகலான தெரு என்பதால் தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

மேலும், தீ விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொருக்குப்பேட்டை பகுதியில் அதிகாலை மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் இரும்பு குடோனில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரோனா- ஆய்வில் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details