தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - ஆணையர் தகவல்

By

Published : Nov 27, 2020, 11:44 AM IST

சென்னை: நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

corporation
corporation

சென்னையில் பெய்யும் சாதாரண மழைக்கே மாநகரம் வெள்ளக்காடாகி விடுகிறது. அதுவே சற்று பலமாக பருவமழைக்காலங்களில் பெய்தால் குடியிருப்புகளுக்குள் மட்டுமல்லாது இரண்டு மூன்று மாடி கட்டடங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதற்கு கடந்த 2015 ஆண்டு பெருவெள்ளமும், தற்போதைய நிவர் புயலுமே எடுத்துக்காட்டு. இதற்கு முக்கிய காரணம் சென்னையின் வடிகால்களான வாய்க்கால்கள், கால்வாய்கள், ஆறுகள், ஏரிகள் என அனைத்து நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டதுதான்.

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற பல்வேறு தரப்பினரும், குறிப்பாக சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மாநகரில் 84 செமீ மழை பெய்துள்ளது. இது வடகிழக்கு பருவமழைக்கால இயல்பை விட 18 செமீ அதிகமாகும். இன்னும் வேறு பருவமழை முடிய ஒரு மாதம் உள்ளது. எனவே, நீர்நிலைகளை கண்டடைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள் பற்றிய ஆவணங்கள் இன்னும் எங்கள் பார்வையில் இருந்து மறைக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்புகள் பற்றி ஏதாவது ஆவணம் இருந்தால் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிய வந்தால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த இடம் புனரமைக்கப்படும் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நிவர் புயல்: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details