சென்னை: சென்னையில் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் இயக்கங்களும் பெருமளவில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், (செப்.05) திங்கள்கிழமையன்று சென்னையின் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.
இதற்கு, அண்மையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும்; பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பை 70 விழுக்காடாக குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.