தமிழ்நாடு

tamil nadu

அம்பேத்கர் காட்டிய வழியில் இந்தியாவைப் பாதுகாப்போம் - ஸ்டாலின் ட்வீட்

By

Published : Dec 6, 2021, 12:14 PM IST

பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவுநாளில், அவர் காட்டிய வழியில் சமத்துவமும் சமூகநீதியும் மேலோங்கி நிற்கும் இந்தியாவைப் பாதுகாக்க உறுதியேற்போம் என அம்பேத்கரின் நினைவு நாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

cm Mk Stalin tweet About Ambedkar death anniversary, cm Stalin remembering Ambedkar, Ambedkar 65th death anniversary, cm stalin tweet about Ambedkar, father of Indian Constitution, அம்பேத்கரை நினைவுக் கூர்ந்த ஸ்டாலின், அம்பேத்கர் 65ஆவது நினைவு நாள், அண்ணல் அம்பேத்கர், முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை
அம்பேத்கர் காட்டிய வழியில் இந்தியாவைப் பாதுகாப்போம்

சென்னை:இந்தியத் தேசத்தின் சட்ட வடிவமைப்பாளர் அண்ணல் அம்பேத்கரின் 65ஆவது நினைவு நாள் நாடு முழுவதும் இன்று (டிச. 6) அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அம்பேத்கர் நினைவு நாளான இன்று அவரை நினைவுகூர்ந்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்து, அவர்தம் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அறிவுச்சுடர் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவுநாளில், அவர் காட்டிய வழியில் சமத்துவமும் சமூகநீதியும் மேலோங்கி நிற்கும் இந்தியாவைப் பாதுகாக்க உறுதியேற்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: 65ஆம் ஆண்டு நினைவு: அதிகார குரலற்றவர்களின் அறிவாயுதம் அண்ணல் அம்பேத்கர்

ABOUT THE AUTHOR

...view details