தமிழ்நாடு

tamil nadu

Rosaiah passed away: ரோசய்யா மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

By

Published : Dec 4, 2021, 10:49 AM IST

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

former tamilnadu governor Rosaiah passed away, TN CM stalin condolences to former tn governor rosaiah death, தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைந்தார், ரோசய்யா மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Rosaiah passed away

சென்னை: ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராகவும், தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பதவிவகித்த கோனிஜெட்டி ரோசய்யா (88) உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (டிசம்பர் 4) காலை உயிரிழந்தார்.

இந்நிலையில், ரோசைய்யா மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநருமான ரோசய்யா மறைவு செய்தியைக் கேட்டபோது மிகவும் மன வேதனையடைந்தேன்.

அவர் மிகுந்த அனுபவமும், அறிவாற்றலும் கொண்ட மூத்த அரசியல் தலைவராவார். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரோசய்யா, 2011 முதல் 2016ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Rosaiah passed away: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details