சென்னை: சென்னையில் உள்ள தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தின் இரு அமர்வுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பக் கோரியும், மூன்றாவது அமர்வை அமைக்கக் கோரியும் சென்னையைச் சேர்ந்த வெங்கட சிவகுமார் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காலியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது அமர்வு அமைப்பது என்பது குடியரசுத் தலைவரின் தனி அதிகாரத்துக்குள்பட்டது எனவும் ஒன்றிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.