தமிழ்நாடு

tamil nadu

சென்னையில், நான்காயிரத்தைக் கடந்த கரோனா உயிரிழப்பு!

By

Published : Jan 4, 2021, 2:18 PM IST

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 23ஆக உள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

chennai corona update on january 4
chennai corona update on january 4

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகரிப்பதாகத் தெரிகிறது.

அவற்றைக் குறைக்க அந்தந்த மண்டலங்களில் அதிக மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.

கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடும் 97ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருபவர்கள் ஒரு விழுக்காடாக உள்ளனர்.

இச்சூழலில், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தம் இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 234 பேர் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள இரண்டாயிரத்து 406 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மேலும் நான்காயிரத்து 23 பேர் இந்த தொற்றினால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த உயிரிழப்புகள் நான்காயிரத்து 23ஆக உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில்,

  • அண்ணா நகர் -24,862
  • கோடம்பாக்கம் - 24,444
  • தேனாம்பேட்டை - 21,666
  • ராயபுரம் - 19,815
  • அடையாறு - 18,361
  • திரு.வி.க. நகர் - 18,011
  • தண்டையார்பேட்டை - 17, 264
  • அம்பத்தூர் - 16,016
  • வளசரவாக்கம் - 14,336
  • ஆலந்தூர் - 9,348
  • பெருங்குடி - 8, 362
  • மாதவரம் - 8, 110
  • திருவொற்றியூர் - 6,822
  • சோழிங்கநல்லூர் - 6,020
  • மணலி - 3,584

ABOUT THE AUTHOR

...view details