தமிழ்நாடு

tamil nadu

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வங்கிகளுக்கு விடுமுறை

By

Published : Oct 5, 2021, 5:39 PM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு விடுமுறை
வங்கிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மாவட்டங்களில், வரும் அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு நேற்று ஆணை வெளியிட்டது.

வங்கிகளுக்கு விடுமுறை

இந்நிலையில், வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. இதனால் அன்றைய தினம் மக்கள் வங்கிச் சேவையைப் பெற முடியாது. அதே நேரம் தேர்தல் நடைபெறாத டவுன் பஞ்சாயத்துக்கள், முனிசிபாலிட்டிக்களில் உள்ள வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சர் தனிப்பிரிவில் ஸ்டாலின் திடீர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details